சனி, 14 பிப்ரவரி, 2009

செல்போனில் அதிக நேரம்


செல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது.

தவிர, சாலைகளில் செல்லும்போது சிலர் செல்போன்களில் பேசியவாறே நடந்து செல்வதும், எதிரே வரும் வாகனங்களைப் பார்க்காமல் சாலைகளைக் கடத்தல், ரயில் தண்டவாளங்களைக் கடத்த்ல் போன்றவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன.

தவிர, சிலர் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவாறே செல்போனிலும் பேசிக் கொண்டிருப்பர். மறுமுனையில் பேசுபவர் என்ன மாதிரியான விஷயம் பற்றி பேசுகிறாரோ, அதனை பொருத்து வாகனத்தில் செல்பவரின் சாலை மீதான கவனம் சிதறக் கூடும். எனவே செல்போன் என்பது தகவல்களை பரிமாறிக் கொள்ள மட்டுமே என்பதை ஆண்/பெண் என இருபாலரும் உணர வேண்டும்.

கூடிய வரை சாலைகளில் செல்லும் போது பேசுவதைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு, பேசி முடித்த பின் செல்லலாம்.

தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். வாழ்க்கையை தொலைத்தால், மீண்டும் பெற முடியுமா? என்பதை, அவர்கள் உணர வேண்டும்.

சென்னைக்கும் வந்துவிட்டது 3 ஜி


சென்னை: மக்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடந்த 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது.இந்தியாவில் இதனை அரசுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனம் அளிக்கிறது.சென்னையில் பி.எஸ்.என்.எல் இந்த சேவையை அளிக்கிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் இன்னும் பல மாதங்களுக்குப் பிறகே இந்த சேவையை வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.3 ஜி தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. இந்த வசதியைக் கொண்ட மொபைல்கள் மூலம், செல் பேனிலேயே வீடியோ கான்பரன்சிங், இணைய தள சேவை, தொலைக்காட்சி சேவை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் கிடைக்கும்.
இது முழுக்க முழுக்க வயர்லஸ் பிராட்பேன்ட் தொழில் நுட்பம் என்பதால் இதுவரை இருந்ததைப் போலல்லாமல் இணையதள சேவையும் அதிவேகமாக இருக்கும். சாதாரண மொபைலில் நாம் அனுபவித்த வேகத்தை விட 40 மடங்கு அதிவேகமான சேவையை 3 ஜி மொபைல்களில் பெறமுடியும்.3 ஜி பெருமைகளை நாம் இப்படி அடுக்கிக் கொண்டே போக, இதற்கடுத்த 4 ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன மேற்கத்திய நாடுகள். இது 3ஜியைவிட பல மடங்கு அதிவேகம் கொண்ட தகவல் தொழில்நுட்ப வசதி ஆகும்.
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தன வங்கிகள்
அரசு வங்கிகளில் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி விரைவில் 9.25 மாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வட்டி.வீட்டுக்கடன்களுக்கு இதுவரை 11 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது.இந்த வட்டி விகிதம் மிக அதிகம் என்பதால் தவணை செலுத்த முடியாமல் நடுத்தர குடும்பங்கள் அவதிப்படுகின்றன. பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ள இந்த சூழலில் அரசு மற்றும் அனைத்து தனியார் துறை வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பலவேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய நிதியை வீட்டுக் கடன் வசதி வங்கிகளுக்கு அளித்துள்ளது.ஆனால் இந்த உதவிகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும், வணிக வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அரசுத்துறை வங்கிகள் வட்டி குறைப்பு குறைத்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக ரொக்க இருப்பு விகிதம், ரெபோ ரேட் குறைப்பு பற்றியே விரிவாக விவாதித்து வருகின்றன.ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூட, வங்கிகளின் இந்தப் போக்கைக் கண்டித்ததோடு, அரசு அறிவித்துள்ள சலுகைகளை கீழ்மட்ட மக்களுக்கு வங்கிகள் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார்.இந்நிலையில் அரசு வங்கி சேர்மன்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், நிதி அமைச்சக அதிகாரிகளை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்க அரசு வங்கி நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர்.அதன்படி இப்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை அரசுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.நாட்டில் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோரில் 80 சதவீதம் பேர், 20 லட்சத்துக்கு குறைவாகத்தான் வாங்குகின்றனர். இப்போது மாறும் வட்டி வீத முறையில வட்டி 11 சதவீதமாக உள்ளது. அதை 1.75 சதவிகிதமாகக் குறைத்து 9.25 சதவீதமாக்கியுள்ளன.அதேபோல 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 2.5 சதவிகித வட்டியைக் குறைத்து 8.5 சதவிகிதமாக்கியுள்ளனர்.இந்த வட்டி விகிதக் குறைப்பால் தற்போது கடன் வாங்கியுள்ளோர் எந்த அளவு பயனடைவார்கள் என்பது தெரியவில்லை.
இந்திய வங்கிகளுக்கு 14 பில்லியன் டாலர்கள் கடன் கொடுக்க உலக வங்கி முடிவு
வாஷிங்டன் : இந்திய வங்கிகளில் குறைந்து போயிருக்கும் பணப்புழக்கத்தை சரி செய்யவும், மற்ற நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை போக்கவும், உலக வங்கி 14 பில்லியன் டாலர்கள் கடன் அளிக்க முன் வந்துள்ளது. இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குனர் ரேசிட் பென்மசவுட் இதுகுறித்து பேசிய போது, சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் அதிக ம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய ஹவுசிங் பேங்குகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் உடனடியாக கடன் கொடுக்கப்படும் என்றார். இந்திய முதலீட்டு சந்தை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்திய வங்கிகளால் நீண்டகால அடிப்படையில் இதனை சரிசெய்ய நிதி <உதவி செய்ய முடியவில்லை என்றார் பென்மசவுட். இந்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருக்கும் கம்பெனிகளாளும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே இன்னும் சில மாதங்களில் 27 இந்திய வங்கிகளுக்கு, அவர்களுக்கு தேவையான நிதியை உலக வங்கி அளிக்கும் என்றார். உலக வங்கி அளிக்கும் 14 பில்லியன் டாலர் கடனுதவி இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்திற்கு வந்து விடும் என்றார் அவர். பப்ளிக் ஃபண்ட் ஒன்றை துவங்குகிறது தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனம் மும்பை : இப்போதும், இனிவரும் காலங்களிலும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக உதவிட தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் நிறுவனம் பப்ளிக் சர்வீஸ் வெல்ஃபேர் ஃபண்ட் ஒன்றை துவங்குகிறது. சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்த ஃபண்ட் துவங்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் கொல்லப்படும் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், தாஜ் ஹோட்டல் ஊழியர்கள், மற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இந்த ஃபண்டில் இருந்து உடனடியாக உதவித்தொகை வழங்கப்படும் என்று தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கலவரம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இந்த ஃபண்டில் இருந்து நிதி <உதவி செய்ய திட்டம் இருக்கிறது. 103 வருட பாரம்பரியம் உடைய மும்பை தாஜ் மஹால் ஹோட்டல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு அங்கு ஏராளமான பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டதை அடுத்து, தாஜ் ஹோட்டல் மீது அனுதாபம் கொண்ட் ஏராமான இந்திய மற்றும் வெளிநாட்டினர் தாஜ் ஹோட்டல் நிர்வாகத்திற்கு உதவிட முன் வந்துள்ளனர். இவர்களது ஆர்வத்தையும் தாஜ் ஹோட்டல் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு,மரியாதை போன்றவற்றை மதிக்கும் பொருட்டும்தான் இந்த பப்ளிக் சர்வீஸ் ஃபண்ட் துவங்கப்படுவதாக தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த ஃபண்ட் துவங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தாஜ் ஹோட்டல்ஸ் வைத்திருக்கும் சர்.தோராப் டாடா டிரஸ்ட், சர்.ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவையும் இந்த ஃபண்டிற்கு நிதி உதவி செய்ய இருக்கின்றன. இந்த ஃபண்டிற்கு ரத்தன் டாடா, ஆர்.கே. கிருண்ஷகுமார், என்.ஏ. சூனவாலா, ஆர்.என்.பிக்ஸன், ஏ.பி.கோயல் மற்றும் ஏ. முகர்ஜி ஆகியோர் போர்டு ஆஃப் டிரஸ்டியாக இருப்பார்கள் என்றும் தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை 47 டாலராக உயர்ந்தது டோக்கியோ : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒரு டாலர் உயர்ந்து 47 டாலராகி இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் கவலையடைந்திருக்கும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ( ஓபக் ) இந்த வார கடைசியில் கூடி, எண்ணெய் <உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த செய்தி வெளியானதும் இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்து விட்டது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.04 டாலர் அதிகரித்து 47.32 டாலராகி இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 69 சென்ட் அதிகரித்து 47.10 டாலராகி இருக்கிறது. இருந்தாலும் கடந்த ஜூலை மாத மத்தியில் பேரலுக்கு 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 100 டாலர் குறைந்து வெறும் 47 டாலராகத்தான் இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிதாக 2000 பேரை நியமிக்கிறது பஞ்சாப் நேஷனல் வங்கி மார்ச் 2009 க்குள் புதிதாக 2000 ஊழியர்களை நியமிக்க உள்ளது. இவர்கள் பல்வேறு முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரிவுகளில் நியமிக்கப்பட உள்ளனர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் சக்ரபர்த்தி தெரிவிக்கையில் “இந்த வருட கணக்கு வழக்கு முடிவடையும் முன்பே எங்கள் வங்கிக்கு பல்வேறு பிரிவுகளுக்கு 2000 ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளோம். வங்கியில் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். சிலர் மற்ற இடங்களுக்கு மாறி செல்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக புதிதாக ஊழியர்களை நியமிக்கிறோம். தொடர்ந்து ஊழியர்களின் நியமனம் நடக்க உள்ளது.” என்றார். சுமார் 350க்கும் அதிகமாக மேனேஜர் போஸ்டிங்கிற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜெனரல் மேனேஜர், செக்யூரிட்டி செக்ஷன், மற்ற உயர்பதிவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே தருணத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி 4200 பேரை புதிதாக நியமிக்க உள்ளது. 1300 பேர் கஸ்டமர் சர்வீஸ் பிரிவுக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 26 டிசம்பர், 2008

UdLs LÚjÕ
AWÑ úL©s ¥.®. úRûYVô?

úRûY
úRûY«pûX
LÚjÕ CpûX